Tuesday, November 18, 2014

God's Child Amutha

கதையல்ல நிஜம் :
- டாக்டர் பாலசாண்டில்யன் 

திரு மற்றும் திருமதி சாமுவேல் நடத்துகின்ற ஆதரவற்றோர் இல்லத்தில் கிட்டத்தட்ட அறுபது குழந்தைகள் இருந்தன. அமுதா எனும் புதிய சிறுமி சேர்க்கப்படுகிறாள்.

பத்து நாட்கள் கழித்து மிகப் பெரிய பணக்காரர் வருகிறார். அத்தனை குழந்தைகளுக்கும் பெரியதொரு பொம்மை வாங்கித் தருகிறார். பொம்மை நிஜமான குழந்தை போல அழகாக இருக்கிறது. எல்லாக் குழந்தைகளும் அந்த பொம்மையைக் கட்டிப் பிடித்து விளையாடுகின்றன.

அமுதா மட்டும்  அவளுக்கு கிடைத்த பொம்மையை உற்று உற்றுப் பார்க்கிறாள். அந்த பொம்மையின் கண்ணை விரல் விட்டுத் தோண்டி எடுக்கிறாள்.

திருமதி சாமுவேல் என்கிற 'அம்மா' அதைக் கவனித்து அமுதாவிடம் விரைந்து 'பளார் பளார்' என்று அமுதாவை அடிக்கிறார். "எப்படிப்பட்ட கிராதகி வயிற்றில் பிறந்தவளாக நீ இருக்க வேண்டும். இப்படி செய்து விட்டாயே" என்று அறை அதிரும்படி கத்துகிறாள். அமுதா விசும்பி விசும்பி அழுது துடிக்கிறாள்.

அரை மணி நேரத்திற்குப் பின்பு அமுதா மெல்ல திருமதி சாமுவேல் அருகில் சென்று "அம்மா ...அம்மா ! நம் இல்லத்தில் கோமதி ஆயாவுக்கு கண் இல்லையே. அவருக்கு வைக்கலாமே என்று தான் பொம்மையின் கண்ணைத் தோண்டி எடுத்தேன்" என்றாள்.

திருமதி சாமுவேலுக்கு தன்னை யாரோ அறைந்தது போல் இருந்தது.

இந்த சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த சாமுவேல் தன் மனைவியிடம் சொன்னார் நிதானமாக .."நமக்குப் பிறகு இந்த இல்லத்தைச் சரியாக கவனித்துக் கொள்ளப் போவது இந்தக் குழந்தை அமுதா தான். இது ஆண்டவனால் அனுப்பி வைக்கப்பட்ட தெய்வக் குழந்தை. இவளை நாம் கவனமாக வளர்க்க வேண்டும்."

திருமதி சாமுவேல் தனது தவறை உணர்ந்தவராக அமுதாவை உற்றுப் பார்த்தாள் ஆச்சரியத்தோடு....!

No comments:

Post a Comment