அரவு பூண்டவனை அனுதினம் பூசித்தால்
அயர்வு நீங்கும் உயர்வு ஓங்கும் (அரவு)
குலம் பிழைக்கும் நலம் தழைக்கும்
பிறவிப் பயனவன் பிணிகள் தீர்ப்பவன்
பிறை சூடிய பெருமான் சிற்றம்பலனை ( அரவு)
சபைக்கு வருபவர் சங்கடம் தீரும்
கிருபை பெற்றவர் பாவங்கள் போகும்
திருநீர் அணிந்தவர் நோய்கள் அகலும்
திருநாமம் சொல்பவர் பயங்கள் விலகிட (அரவு )
விருந்து மாவான் மருந்து மாவான்
வினை தீர்க்கும் விஸ்வநாதப் பெருமான்
வில்வ மாலையில் வீற்றிடும் லிங்கன்
விடமுண்ட கண்டன் வீரியம் தருமந்த ( அரவு)
- டாக்டர் பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment