https://youtu.be/obu0qHyz5zM?si=z8vbhmjV3lPIceJf
மின்கைத்தடி அமைப்புக்கு நன்றி

புன்னகையால் மனம் வென்றிடுவாள் - ஒரு
கண்ணசைவில் அன்பைத் தந்திடுவாள்
தன்னிகரில்லா கனிவைச் சுரந்து - நல்ல
தாயவளென்று உணர்த்திடுவாள் (புன்னகை)
ஆனந்தம் தான் அவள் மடியினிலே - புது
அன்புமழை அவள் வடிவினிலே
ஆரம்பமே அவள் உறவினிலே - என்
அகிலமே ஆனவள் உருவினிலே (புன்னகை)
தன்னையே உருக்கிடும் தியாகியவள் - என்றும்
தன்னலம் அறியா யோகியவள்
தாயெனும் இலக்கணமாய் ஆகியவள் - வாழ்வின்
தனிப்பெருங் கவிதையாய் மாறியவள்
- பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment