https://youtu.be/SU-F9CiuH_g?si=6scDFdkPLyuVZjZ7
எனது கனவை உனது கனவாய் எண்ணி உணர்ந்து
நனவாய் ஆக்கி மகிழ்கின்றாய்...
அப்பா எல்லாம் நீயே சகிக்கின்றாய் ...
உன்னிடம் ஆடை குறைவாய் இருப்பதுவா
உன் கவலை
எமக்கு குறையே இன்றி இருப்பது தானே உனது கவலை
கடைகள் சென்றாலும் வாங்குவது
என்னவோ எமக்குத் தானே
அப்பா எல்லாம் நீயே சகிக்கின்றாய் ...
எம்மிடம் எதை நீ உரைக்கின்றாய் ...?
சுகமோ துக்கமோ உன் கண்களில்
என்றும் தெரியாது
சுகமே யாம் பெற பிரார்த்தனை, உன்
மனம் வேறு அறியாது
கோபமாய் யாம் பேசினால் புன்னகை
தானே உனது பதில்
அப்பா எல்லாம் நீயே சகிக்கின்றாய் ...
எம்மிடம் எதை நீ உரைக்கின்றாய் ...?
எமக்காக நீ உன் உயிர் விடக் கூட தயங்க மாட்டாய்
எவர் வந்தாலும் எதிரில் எமக்கிடர் வந்திட
விட மாட்டாய்
எமை நோக்கி ஒரு தூசி வந்தாலும் இமை
போல் நீ காக்கின்றாய்
அப்பா எல்லாம் நீயே சகிக்கின்றாய் ...
எம்மிடம் எதை நீ உரைக்கின்றாய் ...?
No comments:
Post a Comment