வானவில்லாக வா
மனதைக் கிறங்கடிக்கிறது
மனங்குளிர நீ வருவாய் என
மனதாரக் காத்திருந்தேன்
வரவில்லை நீ...
உனைப் பற்றிய தகவலும் தான்...
நீ வராது போனதால்
மனம் அசையாமல் அப்படியே நின்றது
மரத்தில் கட்டிய ஊஞ்சல் போல...
வரவில்லை நீ வெகு நேரமாகியும்
வரவில்லை எந்தன் நெஞ்சில் மூச்சும்...
இறங்காமல் அங்கே காத்திருப்பேன்
இரக்கமிருந்தால் ஏறி வா அன்பே...
நிலவு தெரிகிறது..
நிலவை நிலவென்று சொல்ல மாட்டேன்...
உன் முகம் பார்த்த பிறகு...
வானவில்லாக வந்து போ வண்ணம் சேர்க்க...
எனையே நான் உயிரோடு பார்க்க...!!
- பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment