Monday, July 21, 2025

அழகிய அயோத்தி நகரினிலே

 அழகிய அயோத்தி நகரினிலே

அற்புத ராமன் எழுந்து நின்றான்
பயபக்தியுடன் வழிபடவே எழில்
பாலராமன் சிரித்து நின்றான்
வேதமந்திர கோஷத்துடன் இனிதே
வில்லேந்தி ராமன் காட்சி தந்தான்
தங்கம் வைரம் ஜொலிஜொலிக்க
திருவாபரணக் கோலம் கொண்டான்
வண்ண மலர்களின் நடுவே
அண்ணல் ராமன் மிளிர்கின்றான்
சகல வாத்தியம் முழங்கிடவே
அகில உலகைக் காக்க வந்தான்
மலர் மழை பொழியும் தருணம்
சிலை ரூபமாய் சிலிர்த்து நின்றான்
பலர் வந்து சூழப் பாங்குடன்
பரிபாலன மூர்த்தி காட்சி தந்தான்
கற்கப்பட வேண்டியவன் ராமன்
கலியினைக் காக்கவே வந்து நின்றான்
பாரினில் மக்களைப் பாலித்திடவே
பரிபூரணனாய் இன்று பரிமளித்தான்
- பாலசாண்டில்யன்
No photo description available.

No comments:

Post a Comment